Friday 9 January 2015

Yaar Petra Magano Nee songs lyrics | யார் பெற்ற மகனோ | Kaathi songs lyrics

யார் பெற்ற மகனோ, நீ யார் பெற்ற மகனோ
இந்த ஊர் கும்பிடும், குல சாமி இவன்

ஊர் செய்த தவமோ, இந்த ஊர் செய்த தவமோ
மண்ணை காபற்றிடும், இவன் ஆதி சிவன்.

அடி வேர் தந்த வேர்வைக்கு ஈடில்லையே
இந்த ஊர் பூக்கும் நேரத்தில் நீ இல்லையே
யாரோ யாரோ நீ யாரோ
இன்பம் தந்த கண்ணீரோ
யாரோ யாரோ நீ யாரோ
இன்பம் தந்த கண்ணீரோ

யார் பெற்ற மகனோ, நீ யார் பெற்ற மகனோ
இந்த ஊர் கும்பிடும், குல சாமி இவன்.

கை வீசும் பூங்காத்தே நீ எங்கு போனாயோ
யார் என்று சொல்லாமல் நிழல் போல நடந்தாயோ
முறை தான் ஒரு முறை தான்
உன்னை பார்த்தல் அது வரமே
நினைத்தால் உன்னை நினைத்தால்
கண்ணில் கண்ணீர் மழை வருமே

யாரோ யாரோ நீ யாரோ
இன்பம் தந்த கண்ணீரோ
யாரோ யாரோ நீ யாரோ
இன்பம் தந்த கண்ணீரோ

யார் பெற்ற மகனோ, நீ யார் பெற்ற மகனோ
இந்த ஊர் கும்பிடும், குல சாமி இவன்.

அடி வேர் தந்த வேர்வைக்கு ஈடில்லையே
இந்த ஊர் பூக்கும் நேரத்தில் நீ இல்லையே
யாரோ யாரோ நீ யாரோ நீ யாரோ
இன்பம் தந்த கண்ணீரோ கண்ணீரோ
யாரோ யாரோ நீ யாரோ
இன்பம் தந்த கண்ணீரோ கண்ணீரோ

யார் பெற்ற மகனோ, நீ யார் பெற்ற மகனோ
இந்த ஊர் கும்பிடும், குல சாமி இவன்.

No comments:

Post a Comment

Newer Post Older Post Home